Tuesday, 5 April 2011
மகரந்தம்
பனியில் நனைந்த
பூக்களையே
வெரித்துப்பார்க்கிறாய்
அவைகளும் அப்படியே
பார்க்கின்றன
பூகோள விதியில்
ஒரு மாற்றம்
உன் மகரந்தம் அதனோடு.
•
பாவம்
‘அவல நெனச்சிட்டு
உரல இடிக்காத’
தவறான வேலைக்கு
அம்மா இப்படித்தான் திட்டுவாள்
நான்
அவளை நினைத்து
உரலானது
அவளுக்கும்கூட தெரியாது...
பாவம்
•
Monday, 4 April 2011
அழுகிறேன் நான்
♫
உனக்கு பிடித்தப் பாடலை
திரும்பத்திரும்
ப கேட்கிறேன்.
அன்றைய மழைநின்ற இரவிலும்கூட.
காத்திருந்த கண்களைபோல
மீண்டும் அழத்தொடங்கியது
அது.
****
அழுகின்ற போதெல்லாம்
அந்தக் குழந்தையை
முத்தமிட்டே கொஞ்சுகிறாய் நீ..
அழுகிறேன் நான்
•
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)