Tuesday, 5 April 2011

மகரந்தம்






பனியில் நனைந்த
பூக்களையே
வெரித்துப்பார்க்கிறாய்

அவைகளும் அப்படியே
பார்க்கின்றன

பூகோள விதியில்
ஒரு மாற்றம்

உன் மகரந்தம் அதனோடு.




பாவம்



‘அவல நெனச்சிட்டு
உரல இடிக்காத’

தவறான வேலைக்கு
அம்மா இப்படித்தான் திட்டுவாள்

நான்
அவளை நினைத்து
உரலானது 
அவளுக்கும்கூட தெரியாது...
பாவம்



Monday, 4 April 2011

அழுகிறேன் நான்




உனக்கு பிடித்தப் பாடலை 
திரும்பத்திரும்ப  கேட்கிறேன். 
அன்றைய மழைநின்ற இரவிலும்கூட. 
காத்திருந்த கண்களைபோல 
மீண்டும் அழத்தொடங்கியது 
அது.
 
****

அழுகின்ற போதெல்லாம்
அந்தக் குழந்தையை
முத்தமிட்டே கொஞ்சுகிறாய் நீ..
அழுகிறேன் நான்